புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், நிதி ஆயோக் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சிந்துஸ்ரீ குல்லர் மற்றும் நிதியமைச்சகத்தின் முன்னாள் அதிகாரிகள் பலருக்கு டெல்லி நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதமர்பரத்துடன் குற்றம் சாட்டப்பட்ட கார்த்தி சிதம்பரம் மற்றும் நிதித்துறை அமைச்சக முன்னாள் மற்றும் தற்போதைய அதிகாரிகள் 12 பேருக்கு டெல்லி நீதிமன்றம் நேற்று சம்மன் அனுப்பியிருந்தது. இந்த விசாரணைக்காக, சிதம்பரமும் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.
முன்னாள் அதிகாரகள் பலர் ஜாமீன் கோரி விண்ணப்பத்திருந்தனர். இது தொடர்பாக சிபிஐ பதில் அளிக்க டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிதி ஆயோக் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சிந்து குல்லர், நிதியமைச்சகத்தில் பணியாற்றிய முன்னாள் அதிகாரிகள் அஜீத் குமார் துங் டங், ரவீந்தர பிரசாத், அனுப் கே. பூஜாரி ஆகியோருக்கு டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் இடைக்கால ஜாமீன் வழங்கினார்.